சிரமம் அடையும் பாதசாரிகள்

Update: 2026-02-15 10:08 GMT

சென்னை பல்லாவரம் 3-வது மெயின் சாலை வாகனங்கள் அதிகமாக செல்லும் பரபரப்பான சாலை. இங்கு பொதுமக்கள் நடந்து செல்ல சாலையின் ஓரத்தில் உள்ள நடைபாதை சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இதனை சரிசெய்யாமல் மக்கள் அதில் விழாதபடி தடுப்பு போடப்பட்டுள்ளது. இதானல் நடைபாதையில் செல்லும் பொதுமக்கள் சாலையில் இறங்கி அதனை கடக்க வேண்டி உள்ளது. சாலையில் வாகனங்கள் அதிகமாக செல்வதால், மக்கள் சாலையில் இறங்கி கடக்கும் போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நடைபாதையை சரிசெய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்