விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை சூரார்பட்டியில் இருந்து மஞ்சள் ஓடைப்பட்டி வரை செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் அவ்வப்போது விபத்துகளும் நிகழ்கிறது. எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.