சாலை பணி விரைந்து முடிக்கப்படுமா?

Update: 2022-12-04 10:29 GMT
சேலம் மாவட்டம் தாரமங்கலம்-ஓமலூர் செல்லும் சாலையை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது அந்தப்பணி ஆமை வேகத்தில் நடைபெற்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி செல்லும் மாணவர்கள் போக்குவரத்து நெரிசலின் காரணமாக சரியான நேரத்திற்கு செல்ல முடியவில்லை. மேலும் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டி நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்