புதர் செடிகள் அகற்றப்படுமா?

Update: 2022-12-04 09:17 GMT

கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள இணைப்பு சாலைகளில் தொடர் மழையால் இருபுறமும் புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்து காணப்படுகின்றன. இதனால் விஷ ஜந்துகளின் நடமாட்டம் அதிகரித்து உள்ளதோடு, அந்த வழியாக நடந்து செல்பவர்கள் மற்றும் வாகனங்களில் செல்வோரும் போக்குவரத்து இடையூறுக்கு நடுவே செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே சாலையோரங்களில் அடர்ந்து வளர்ந்துள்ள புதர் செடிகளை வெட்டி அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்