குண்டும், குழியுமான சாலை

Update: 2022-11-30 16:42 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியில் உள்ள சார் பதிவாளர் அலுவலகம் மற்றும் புதிய பஸ் நிலையம் செல்லும் தார் சாலை முழுவதும் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. மழைக்காலங்களில் சாலை முழுவதும் தண்ணீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் அடிக்கடி விபத்துக்களிலும் சிக்குகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?

-ராஜன், வேப்பனப்பள்ளி, கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்