குண்டும், குழியுமான சாலை

Update: 2022-11-30 15:37 GMT

கரூர் மாவட்டம், கரூர் மாநகராட்சி 1-வது வார்டில் கோதூர் உள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். வெங்கமேட்டில் இருந்து குளத்துப்பாளையம் வழியாக கரூர்-சேலம் தேசிய சாலையிலிருந்து கோதூர் செல்லும் சாலை சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு குண்டும், குழியுமாகவும், மழைபெய்யும்போது சேறும், சகதியுமாக உள்ளது. மேலும் கரூர் நகரில் உள்ள இறைச்சி கடைகளில் இருந்து வரும் கழிவுகளை அந்த பகுதியில் கொட்டி விடுகின்றனர். இதேபோல் அந்த பகுதியில் டாஸ்மார்க் கடை உள்ளது. மது அருந்துபவர்கள் காலி பாட்டில்களை நடுரோட்டில் உடைத்து விடுகின்றனர். இதனால் சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து கோதூருக்கு செல்லும் சாலையில் பொதுமக்கள் நடமாடுவதற்கு அச்சமாகும், பயமாகவும் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்