மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே கோமல் கடைவீதி சாலையில் நாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகிறது. இவை, அந்த பகுதியில் உள்ள வீடுகளில் வளர்க்கப்படும் ஆடு,கோழிகளை வேட்டையாடி செல்கின்றன. மேலும், சாலையில் நடந்து செல்லும் பெண்கள்,குழந்தைகளை விரட்டி செல்கின்றன. இதனால் சாலையில் பொதுமக்கள் அச்சத்துடன் நடந்து சென்று வருகின்றனர். அதுமட்டுமின்றி வாகனங்களில் செல்பவர்களை துரத்தி செல்வதால் வாகனஓட்டிகள் கீழே விழுந்து விபத்தில் சிக்கி கொள்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?