சேதமடைந்த சமுதாயக்கூடம் சீரமைக்கப்படுமா?

Update: 2022-11-30 12:18 GMT

நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம் பரமநல்லூரில் சமுதாய கூடம் உள்ளது. இந்த சமுதாயக்கூடம் கடந்த சில ஆண்டுகளாக எந்தவித பராமரிப்பும் இன்றி சேதம் அடைந்து காணப்படுகிறது. மேலும் அதில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் சமுதாய கூடத்தை பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சமுதாய கூடத்தை சீரமைத்து தர வேண்டும்.

மேலும் செய்திகள்