சாலையின் நடுவே படுத்துக்கொள்ளும் கால்நடைகள்

Update: 2022-11-30 12:16 GMT

நாகை மாவட்டம் நாகூர் பகுதியில் சாலைகளில் அதிக அளவில் மாடுகள் சுற்றித் திரிகின்றன. இந்த மாடுகள் இரவு நேரங்களில் சாலையின் நடுவே படுத்துக்கொள்கின்றன. இதன் காரணமாக பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், வாகனங்களில் வருபவர்கள் சாலை நடுவே மாடுகள் இருப்பது தெரியாமல் விபத்தில் சிக்கிக் கொள்கின்றனர். எனவே அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்