மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா ஆக்கூர் அருகே அப்புராசபுரம்புதூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் இருந்து கருவேலி பகுதிக்கு இணைப்பு சாலை வசதி இல்லை. இதனால் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் பல ஊர்களை சுற்றி செல்லும் நிலை உள்ளது.
இதன்காரணமாக அந்த பகுதி மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இணைப்பு சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?