மயிலாடுதுறை மாவட்டம் வடகரையில் உள்ள ஜவஹர் தெரு, அரங்கக்குடி போன்ற ஊர்களுக்கு இணைப்பு சாலையாக உள்ளது. இந்த சாலையில் அஞ்சல் அலுவலகம், கூட்டுறவு அங்காடி ஆகியவை உள்ளன. தற்போது இந்த சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்கவேண்டும்.