சாலை அமைக்கும் பணி மீண்டும் தொடங்கப்படுமா?

Update: 2022-11-30 11:48 GMT

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகா வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சியில் உள்ள கள்ளுக்கடை திடல், வள்ளுவர் தெரு, விளக்கு முகம் தெரு, தெற்கு வெளி தெரு, தாமரைகுளத்தெரு செல்லும் சிமெண்ட்டு சாலையை தார்ச்சாலையாக மாற்றும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. பணிகள் தொடர்ந்து நடந்த நிலையில் சில வாரங்களாக பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் இருசக்கர வாகனங்களில் செல்லும் போது தவறி விழும் நிலை ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து விரைவில் தார்ச்சாலை அமைக்கும் பணியை தொடங்க வேண்டும்.

மேலும் செய்திகள்