வேகத்தடைகளின் உயரம் குறைக்கப்படுமா?

Update: 2022-07-17 14:33 GMT
நாகை மாவட்டம் வேதாரண்யம்-நாகை சாலையில் தாலுகா அலுவலகம், மற்றும் தனியார் பள்ளி அருகே வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வேகத்தடைகள் மிக உயரமான போடப்பட்டுள்ளது. இதனால் வாகனங்களில் வருபவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக பள்ளிக்கு மாணவ-மாணவிகளை அழைத்து வரும் பெற்றோர்கள் மிகவும் அவதி அடைகின்றனர். மேலும், உயரமாக வேகத்தடையினால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து விடுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள வேகத்தடைகளின் உயரத்தை குறைக்க நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்