சாலையை சீரமைக்க வேண்டும்

Update: 2022-11-27 09:14 GMT

நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் நோயாளிகள் ஆம்புலன்ஸ் வாகனத்தில் கொண்டு வரப்படுகின்றனர். இதனால், பெருவிளை, பார்வதிபுரம்-ஆசாரிபள்ளம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்த சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுவதால் வாகன ஓட்டிகள், நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, நோயாளிகள், பொதுமக்கள் நலன் கருதி சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஆர்.பிரபானந்து, பெருவிளை.

மேலும் செய்திகள்