நடவடிக்கை எடுக்கப்படுமா?

Update: 2022-11-23 15:36 GMT

நாகர்கோவில் கோட்டார் சவேரியார் ஆலயத்திருவிழா தொடங்கி உள்ளது. இதையொட்டி கோட்டார் ஆயுர்வேத மருத்துக்கல்லூரி அருகில் இருந்து செட்டிகுளம் வரை செல்லும் சாலையின் இருபுறமும் திருவிழாக்கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த சாலையில் செல்லும் வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன. இதனால், விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. எனவே, பொதுமக்கள் நலன் கருதி அந்த பகுதி வேகமாக செல்லும் வாகனங்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

ராசிக், டி.வி.டி.காலனி.

மேலும் செய்திகள்