சேலம் பெரமனூர் நாராயணபிள்ளை தெருவில் வாறுகால் கட்டப்பட்டு சாலை சீரமைக்கும் பணிக்காக ஜல்லி கற்கள் போடப்பட்டுள்ளன. சுமார் ஒரு மாதங்கள் ஆகியும் இந்த சாலை இன்னமும் சீரமைக்கப்படவில்லை. இந்த வழியாக செல்வோர் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். இருசக்கர வாகனங்களால் செல்ல முடியவில்லை. எனவே இந்த சாலையை உடனே சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கண்ணன், சேலம்.