ஆபத்தான தரைப்பாலம்

Update: 2022-11-20 16:01 GMT

அந்தியூர் கெட்டி விநாயகர் கோவில் அருகே தரைப்பாலம் ஒன்று கட்டப்பட்டது. அதன் 2 பக்கங்களிலும் மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. தற்போது பெய்து வரும் மழையால் மூட்டைகளில் இருந்து மணல் கொட்ட ஆரம்பித்துவிட்டது. அதனால் பெரிய வாகனங்கள் செல்லும்போது விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அசம்பாவிதம் ஏற்படுவதற்குள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை சரிசெய்யவேண்டும்.

மேலும் செய்திகள்