விபத்து அபாயம்

Update: 2022-11-20 15:55 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை- ஓசூர் மெயின் ரோட்டில் புதிய பஸ் நிலையத்தில் பஸ்கள் உள்ளே நுழையும் இடத்தில் சாலையில் சிறிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் பஸ்நிலையத்திற்கு வரும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே விபத்து ஏற்படும் முன் இந்த பள்ளத்தை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜா, கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்