மதுரை காளவாசல்- தேனி மெயின்ரோடு சாலையில் பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் வாகனஓட்டிகள் பயணிக்க முடியாத வகையில் தூசி படர்ந்து புகை மூட்டத்தை ஏற்படுத்துகிறது. இதனால் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இதற்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும்.
