சிவகங்கை மாவட்டம் இளையான்குடி மறவமங்கலம் நெடுஞ்சாலையில் கீழத்துறையூரில் வேகத்தடை அமைக்க வேண்டி தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. தற்போது அதன் பயனாக சாலையில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. எனவே நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்து கொள்கின்றனர்.