பொதுமக்கள் அவதி

Update: 2022-11-20 14:54 GMT

விருதுநகர் மாவட்டம் சிவகாசி வெள்ளையாபுரம் செல்லும் வழி காமராஜர் பகுதியில் சாலை அமைப்பதற்காக ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு சாலை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் இந்த வழியாக பயணிக்க முடியாமல் பொதுமக்கள் அவதியடைகின்றனர். மேலும் வாகனஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே சாலை பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்