சாலையின் குறுக்கே சாய்ந்து கிடக்கும் ஆலமரம்

Update: 2022-11-16 14:58 GMT

பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஒன்றியம், பேரளி கிராமத்தில் உள்ள ஏரியின் தெற்கு பகுதி கரையில் இருந்த ஆலமரம் கடந்த ஜூன் மாதம் 2-ந்தேதி வீசிய சூறைக்காற்றில் வேரோடு கரையில் உள்ள பாதையின் குறுக்கே சாய்ந்தது. இன்று வரை அந்த மரம் அகற்றப்படாத காரணத்தினால் அந்த ஏரியின் கரையில் உள்ள பாதை வழியாக தெற்கு பகுதியில் உள்ள காடுகளுக்குச் செல்லும் கால்நடைகள், வாகனங்கள் , பொதுமக்கள் என அனைவரும் சுற்றிச் செல்ல வேண்டியிருக்கிறது. ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாய்ந்து கிடக்கும் மரத்தை அகற்றி பாதையை மீண்டும் பயன்படுத்த உதவ வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்