எச்சரிக்கை பலகை தேவை

Update: 2022-11-16 14:58 GMT

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் இருந்து அருப்புக்கோட்டை செல்லும் சாலையில் அதிக அளவில் வேகத்தடை உள்ளது. ஆனால் இதன் அருகில் எவ்வித எச்சரிக்கை பலகையும், எச்சரிக்கை கோடும் இல்லை. இதனால் இந்த பகுதியில் அவ்வப்போது சிறு, சிறு விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. எனவே பெரும் விபத்து ஏற்படும் முன்னர் இந்த சாலையில் அதிகாரிகள் எச்சரிக்கை பலகை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்