ரோட்டின் மோசமான நிலை

Update: 2022-11-16 14:48 GMT

பெங்களூரு சாந்திநகர் பஸ் நிலையம் செல்லும் டபுள் ரோடு கடந்த ஒரு ஆண்டுகளாக குண்டும், குழியுமாக காட்சி அளித்து வருகிறது. சமீபத்தில் பெய்த கனமழையால் அந்த ரோடு முழுமையாக அரித்து உள்ளது. இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் அந்த ரோட்டில் கவனமாக செல்ல வேண்டிய நிலை உள்ளது.

சற்று வேகமாக சென்றாலும் இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழக்கும் நிலை உள்ளது. அந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்