சகதியில் நிலைதடுமாறும் வாகனங்கள்

Update: 2022-11-16 12:35 GMT

பாளையங்கோட்டை சமாதானபுரத்தில் இருந்து நாற்கரசாலை மேம்பாலம் வரையிலும் சாலையின் இருபுறமும் செம்மண் கொட்டப்பட்டது. தற்போது பெய்த மழையில் அங்கு சாலையோரம் சேறும் சகதியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகனங்கள் நிலைதடுமாறி விபத்துக்குள்ளாகின்றன. எனவே, இதனை சீரமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்