சாலை சீரமைக்க வேண்டும்

Update: 2022-11-16 11:47 GMT

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியம் பாமனியாறு மேற்கு கரையிலிருந்து வீரவநல்லூர் மேலபூவனூர் உள்ளிட்ட பல ஊர்களுக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த வழியாக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் என அனைவரும் நீடாமங்கலம், மன்னார்குடி, தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இந்த நிலையில் இந்த சாலை பல ஆண்டுகளாக சேதமடைந்து போக்குவரத்திற்கு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்களும் இந்த சாலையில் வரமுடியாததால் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சாலையை சீரமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்