மழைநீர் சூழ்ந்துள்ள சாலை

Update: 2022-11-16 11:46 GMT
திருச்சி கே.கே. நகர் பஸ் நிலையத்திலிருந்து கிழக்கு திசை நோக்கி நாகப்பாநகர் செல்லும் சுமார் 400 மீட்டர் நீளமுள்ள தார்ச்சாலையானது மழை நீரால் சூழப்பட்டு, இப்பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் சாலையில் பயணிக்க முடியாத சூழலில் உள்ளது. அவசரத் தேவைக்கு 108 ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத நிலையில் உள்ள இச்சாலையில், தனியார் பள்ளிக்கூடத்திற்கு செல்லும் பள்ளி வாகனங்கள், இரு சக்கர வாகன ஓட்டிகள் செல்லும் போது வாகனங்கள் பழுதடைவதுடன், பள்ளிக்குழந்தைகளை அழைத்து வரும் பெற்றோர்கள், சாலையில் உள்ள பள்ளங்கள் தெரியாமல் கீழே விழுந்து செல்கின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்