தார் சாலை அமைக்க வேண்டும்

Update: 2022-11-16 11:26 GMT

திருவாரூர் மாவட்டம் குன்னியூர் ஊராட்சிக்கும், சித்திரையூர் ஊராட்சிக்கும் இடையில் உள்ள மாவூர் ஆற்றுப்பாலம் வடக்கு கரையில் சுடுகாடு உள்ளது. இந்த சுடுகாட்டிற்கு செல்ல போதிய சாலை வசதி இல்லை. இதனால் மழைக்காலங்களில் சாலை சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்பவர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சுடுகாட்டிற்கு செல்ல தார்ச்சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்