சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2022-11-13 17:11 GMT

நாமக்கல் ராசிபுரம் ஊராட்சி ஒன்றியம் பொ.ஆயிபாளையம் ஊராட்சி பிரதான சாலை சேதமடைந்து உள்ளது. மழை காலங்களில் அந்த ஊராட்சி அலுவலகம் முன்பு உள்ள சாலையில் தேங்கி நிற்கும் தண்ணீர் குளம் போல் காட்சி அளிக்கிறது. பள்ளத்தில் தேங்கி இருக்கும் தண்ணீரால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இந்த சாலையை விரைவில் சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்