சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2022-11-13 16:12 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே குப்பச்சி பாறை கிராமத்தில் இருந்து மாரசந்திரம் செல்லும் சாலை முழுவதும் சுமார் 1 கி.மீ. தொலைவிற்கு குண்டும், குழியுமாக உள்ளதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். தற்போது மழைக்காலங்களில் சாலை முழுவதும் சேறும், சகதியுமாக உள்ளது. மழைநீர் ஆங்காங்கே தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துககுள்ளாகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைத்து புதிய தார் சாலை அமைக்க வேண்டும்.

-பழனி, வேப்பனப்பள்ளி, கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்