சேறும், சகதியுமான சாலை

Update: 2022-11-13 16:10 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கெங்கபிராம்பட்டி கிராமத்தில் சாலை வசதி இல்லை. இதன் காரணமாக மழைக் காலங்களில் அந்த சாலை முழுவதும் சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் பள்ளி மாணவர்கள், வயதானவர்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். இதுபற்றி பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து புதிய சாலை அமைத்து கொடுக்க வேண்டும்.

-வெங்கடேஷ், கெங்கபிராம்பட்டி, கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்