நோய் பரவும் அபாயம்

Update: 2022-11-13 13:38 GMT

பந்தலூர் பஜாரில் தாசில்தார் குடியிருப்பு அருகே உள்ள சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் கடும் அவதி அடைந்து வருகின்றனர். தற்போது மழை பெய்து வருவதால், சாலையில் தண்ணீர் தேங்கி வருகிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. எனவே சாலையை விரைவாக சீரமைப்பதோடு தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்