புதிய தார்ச்சாலை அமைக்கவேண்டும்

Update: 2022-11-13 13:03 GMT

திருவாரூர் மாவட்டம் வடகரை ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு முன்பு செல்லும் சாலையின் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றனர். மணல் சாலையான இந்த சாலை மழையால் சேறும்,சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் பள்ளிக்கு வந்து செல்லும் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு செல்வதில் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து புதிய தார்ச்சாலை அமைத்து தர வேண்டும்..

மேலும் செய்திகள்