சேறும், சகதியுமான சாலை

Update: 2022-11-13 12:59 GMT
திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், சிங்களாந்தபுரம் ஊராட்சியிலுள்ள தங்கநகர் பகுதியில் உள்ள சாலைகள், தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் பள்ளி செல்லும் மாணவர்கள், மருத்துவமனைக்கு செல்லும் முதியவர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். ஊராட்சி நிர்வாகத்தினரிடம் பலமுறை புகாரளித்தும் பலனில்லாததால், சம்மந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைத்து தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்

சாலை பழுது