தரமான சாலை அமைக்க வேண்டும்

Update: 2022-11-09 20:34 GMT
மரக்காணம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வடநெற்குணம் ஊராட்சியின் அய்யர்தெருவில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அங்கு முன்பு இருந்த சிமெண்டு சாலையை பெயர்த்து எடுக்காமல் அதன் மீது மண்ணை கொட்டி அப்படியே சாலை அமைக்கப்படுகிறது. இது போன்ற தரமற்ற முறையில் சாலை அமைப்பதால், குறுகிய காலத்தில் சாலை சிதிலமடைந்து விடும். இதை தவிா்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

மேலும் செய்திகள்