பொதுமக்கள் அவதி

Update: 2022-11-09 16:03 GMT

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டம் கலைக்குளம் ஊராட்சி 3-வது வார்டு பகுதியில் உள்ள சாலை மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் மழைக்காலங்களில் சாலைகளில் மழைநீருடன் கழிவுநீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்