விபத்து அபாயம்

Update: 2022-11-09 14:06 GMT
கிணத்துக்கடவு ஒன்றியம் கப்பளாங்கரை கிராமத்தில் நெடுஞ்சாலை துறை சார்பில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் சிறுக்களந்தை செல்லும் சாலையில் இருந்து வடசித்தூர் செல்லும் சாலையில் உள்ள குட்டை வரை நடைபெறுகிறது. எனினும் சிறுக்களந்தை செல்லும் சாலையில் நடைபெற்ற பணிகள் பாதியில் நிற்கிறது. அங்கு கான்கிரீட் போடப்பட்டு, அதன் கம்பிகள் வெளியே நீட்டிக்கொண்டு உள்ளது. மேலும் குழி ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது. எனவே நிறுத்தப்பட்ட பணிகளை விரைவில் முடிக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்