விருதுநகர் மாவட்டம் முகவூர் தளவாய்புரம் சாலை மோசமான நிலையில் சேதமடைந்து காணப்படுகிறது. சாலையில் ஜல்லிகற்கள் பெயர்ந்து உள்ளது. மேலும் மழையின் காரணமாக ஆங்காங்கே தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. இதனால் வாகனஓட்டிகள், நடைபாதையினர் சாலையில் பயணிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.