சாலை வசதி தேவை

Update: 2022-11-09 09:34 GMT

நாமக்கல் போதுபட்டி ரோட்டிற்கு அருகே யாழ் நகர் உள்ளது. அங்கிருந்து பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் சென்று வருகின்றனர். இந்தநிலையில் மழைக்காலங்களில் யாழ் நகரில் உள்ள மண் சாலை சேறும், சகதியுமாக காணப்படுகின்றது. மேலும் இப்பகுதியில் தெரு விளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் மக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் மிகுந்த சிரம படுகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி யாழ் நகரில் சாலை மற்றும்  தெரு விளக்கு வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்