மதுரை மாவட்டம் செல்லூர்- குலமங்கலம் இணைப்பு மண்சாலையில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளம் ஆங்காங்கே காணப்படுகிறது. தற்போது பெய்த மழையின் காரணமாக சாலை சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இதில் வாகனஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.