‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு நன்றி

Update: 2026-02-01 11:14 GMT

புதுக்கோட்டை மாநகராட்சி பழனியப்பா கார்னரில் இருந்து ராணியார் மகப்பேறு மருத்துவமனை வரை உள்ள சாலை முற்றிலும் சேதமடைந்து இருந்ததால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைந்து வந்தனர். இதனால் அவர்கள் கடும் அவதியடைவதாக ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைத்தனர். இதற்கு செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கும் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்