அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் குறுக்கு சாலையில் இருந்து கொல்லாபுரம் கிராமம் வரை செல்லும் தார்சாலை வழியாக தினமும் ஏராளமான பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்கள் வேன்கள் மற்றும் கல்லூரி பேருந்துகளில் சென்று வருகின்றனர். இந்நிலையில் இந்த சாலை குண்டும், குழியுமாக உள்ளதால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் மாணவர்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே மாணவர்கள் நலன்கருதி சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.