சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2022-07-16 15:29 GMT

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா தளிர்மருங்கூர் ஊராட்சி புதுவயல் கிராமத்தில் சாலை சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சுமார் 50 வீடுகள் கொண்ட இந்த கிராமத்தில் ஒருவழி சாலை மட்டுமே உள்ளது. மேலும் சாலை குறுகியதாக இருப்பதால் நான்கு சக்கர வாகனங்களை ஒரு கிலோ மீட்டர் தொலைவில் நிறுத்த வேண்டிய நிலை உள்ளது. இதனால் அவசர காலங்களில் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா? 

மேலும் செய்திகள்