சாலை வசதி வேண்டும்

Update: 2022-11-06 14:01 GMT

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியம் காரக்கோட்டை கிராமத்தில் உள்ள சுடுகாடுக்கு செல்வதற்கு முறையான சாலை வசதி இல்லை. இதன்காரணமாக மண்பாதை வழியாக எடுத்து சென்று வருகின்றனர். இந்த நிலையில் மழைக்காலங்களில் மண்பாதை சேறும்,சகதியுமாக மாறிவிடுகிறது. மேலும், மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதன்காரணமாக இறந்தவர்களின் உடலை சேற்றிலும், தண்ணீருக்குள் இறங்கியும் எடுத்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சுடுகாட்டுக்கு முறையான சாலை வசதி செய்து தர நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்