சாலையில் தேங்கும் மழைநீர்

Update: 2022-11-06 13:58 GMT

திருவாரூர் மேலவீதி, வடக்குவீதி உள்ளிட்ட பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளன. இருந்த போதிலும் மழைக்காலங்களில் மழைநீர் வடிகால் வழியாக செல்லாமல் சாலையில் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதன்காரணமாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், தேங்கி கிடக்கும் மழைநீரால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள மழைநீர் வடிகால் வழியாக மழைநீர் செல்வதற்கு முறையான நடவடிக்கை எடுப்பார்களா?




மேலும் செய்திகள்