சேறும்,சகதியுமான சாலை

Update: 2022-11-06 13:52 GMT

திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகா ஆலத்தூர் ஊராட்சி மேலஆனைப்பாடி கிராமத்தில் முறையான சாலை வசதி இல்லை. இதன்காரணமாக அந்த பகுதி மக்கள் மண்பாதையை பயன்படுத்தி வருகின்றனர். மழைக்காலங்களில் மண்பாதையில் மழைநீர் தேங்கி சேறும்,சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால் பொதுமக்கள் அந்த வழியாக நடந்து செல்ல முடியாத சூழல் ஏற்படுகிறது. மேலும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட கிராமத்தில் பொதுமக்கள் நலன் கருதி சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்