பால சீரமைப்பு பணிகள் துரிதப்படுத்தப்படுமா?

Update: 2022-11-06 12:19 GMT

நாகை மாவட்டத்தில் பல்வேறு சுற்றுலா தளங்கள் உள்ளன. இதனால் நாகை மாவட்டத்திற்கு தமிழகம் மட்டுமின்றி உலக முழுவதும் பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தற்போது நாகூர் புறவழிச்சாலை பாலம் சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. பணிகள் தொடங்கி நீண்ட நாட்கள் ஆகியும் முடியவில்லை. இதனால் நாகூரில் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். எனவே சம்பந்தப்ட்ட அதிகாரிகள் பாலம் சீரமைப்பு பணிகளை துரிதப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்