சாலை தரமாக சீரமைக்கப்படுமா?

Update: 2022-11-02 13:28 GMT

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்துக்கு உட்பட்ட 2-வது வார்டு வெள்ளக்கிணறு பகுதியில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு உள்ளது. இங்கு சாலை சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. ஆனால் பழைய சாலையை அகற்றிவிட்டு புதிதாக போடாமல், ஒரு சில இடங்களில் மட்டுமே பெயரளவுக்கு சாலை சீரமைக்கப்படுகிறது. இதனால் சீரமைப்பு பணி முடிந்தாலும், சாலை விரைவில் பழுதடையும் நிலை ஏற்படும். இதன் காரணமாக அரசுக்கு வீண் செலவு ஏற்படும். மேலும் பொதுமக்களும் அவதிப்படுவார்கள். எனவே சாலை சீரமைப்பு பணியை தரமாக செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்