அகலப்படுத்த வேண்டிய சாலை

Update: 2022-11-02 11:31 GMT
தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே உள்ள நவலை கிராமத்தில் ௫ ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. இதில் சுமார்  500 -க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தநிலையில் மாணவ, மாணவிகள் சின்னகவுண்டம்பட்டி சாலையை கடந்து பள்ளிக்கு செல்கின்றனர். பள்ளி நேரங்களில் நேரங்களில் அதிகளவு போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் நவலை முதல் சின்னகவுண்டம்பட்டி வரை சாலையை அகலப்படுத்த வேண்டும். இது தொடர்பாக சம்பந்தபட்ட நெடுஞ்சாலை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.




மேலும் செய்திகள்