சிதம்பரம் விழல்கட்டி பிள்ளையார் கோவில்தெரு மற்றும் பெருமாள்தெரு முனையில் உள்ள சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. சாலையும் பலத்த சேதம் அடைந்துள்ளது. இதனால் வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
